ஆன்மிக தகவல் – அசுரனை வதம் செய்த வல்லம் ஏகௌரியம்மன்
தஞ்சாவூர் உருவாவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. வல்லம் ஏகௌரியம்மன் கோயில் முற்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட கோயிலாகும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் உருவாவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. வல்லம் ஏகௌரியம்மன் கோயில் முற்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட கோயிலாகும். இந்த ஏகௌரியம்மா சோழர்களின் வழிபாட்டிற்குரிய தெய்வமாகவும், குல தெய்வமாகவும், அவர்களுக்கு வெற்றிகளைக் கொடுத்த வலிமைமிக்க காளியாகவும் இருந்தாள்.
சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும், வெற்றி என போர்க்களம் செல்லும்போதும் அம்மன் அருள் கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்த ஆணையிடுவது வழக்கம். காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவில் அம்மன் சிலை அமைக்கப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.. இந்த அம்மன் இரண்டு முகங்கள் ஒன்றின் மீது ஒன்றாகக் காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரர்களை அழிக்கும் ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு முகம் கொண்ட அம்மனைக் காண்பது அரிது.
முதலாம் ராஜராஜ சோழனின் 6வது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. கி.பி. 1535 ஆம் ஆண்டில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகெüரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர்.
அக்காலத்தில் ஒரு அசுர வதம் முடிந்த பின்னும் அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அப்போது, மாங்காளி வனம் என அழைக்கப்பட்ட வல்லத்தில் அலைந்து திரிந்தாள். அதனால், நீர் நிலைகள் வறண்டன. வனமெங்கும் தீப்பற்றி எரிந்தது. நிலைமையை உணர்ந்த சிவபெருமான், ஏ கெளரி சாந்தம் கொள் என்றார். அம்மனின் கோபம் சற்று தணிந்தது. அப்போது, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அங்கேயே எழுந்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளின்படி, அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து இன்றளவும் அருள்பாலித்து வருகிறார்.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் அசுரனை வதம் செய்தார். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனை வழிபடுவார்கள்.
தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.
தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் கணவருக்காக பிரார்த்தனை செய்யும் பெண்கள் ஏராளம். தஞ்சாவூர், திருச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், எமனிடம் இருந்து தங்கள் கணவரைக் காக்க வேண்டுகின்றனர். விருப்பங்கள் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாக எருமைக் கன்றைக் கொடுத்து வழிபடுகின்றனர்.
இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கி மனமகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். கருவறையில் ஏகெளரி தேவியைச் சுற்றி இரண்டு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகு மற்றும் கேது ஆட்சி செய்யும் வீடு இது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் திறக்கும் நேரங்கள்:
திங்கள் முதல் வியாழன் வரை காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 வரை மற்றும் மாலை 4:00 முதல் மாலை 6:30 வரை
வெள்ளிக்கிழமை 7:00 AM முதல் 7:30 PM வரை
பௌர்ணமி அல்லது அமாவாசை உள்ள நாட்களில் காலை 7:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை திறந்திருக்கும்