பகவத்கீதை: பகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனை

Rate this post

பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!! பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை…

“பகவத்கீதை” என்றால் “கடவுளின் பாடல்” என்று பொருள். உலகில் இதுவரை நாம் கேள்விப்பட்ட மற்றும் படித்த ஆன்மீக போதனைகளின் இதுவும் ஒரு சிறந்த புத்தகமாக இது கருதப்படுகிறது.


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

2. தேவைக்கு செலவிடு.

3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.

5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

13. அவ்வப்போது பரிசுகள் அளி.

14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.

19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!

26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!

31. வாழ்வை கண்டு களி!

32. ரசனையோடு வாழ்!

33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!

  • மடையன்
  • சுயநலக்காரன்
  • ஏமாற்றுக்காறன்
  • ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!

  • பொய்யன்
  • துரோகி
  • பொறாமைக்காரன்
  • மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

  • அனாதை
  • ஏழை
  • முதியவர்
  • நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!

  • மனைவி
  • பிள்ளைகள்
  • குடும்பம்
  • சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!

  • பொறுமை
  • சாந்த குணம்
  • அறிவு
  • அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!

  • தந்தை
  • தாய்
  • சகோதரன்
  • சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!

  • உணவு
  • தூக்கம்
  • சோம்பல்
  • பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!

  • துக்கம்
  • பொறாமை
  • இயலாமை
  • கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!

  • மனத்தூய்மை உள்ளவன்
  • வாக்கை நிறைவேற்றுபவன்
  • கண்ணியமானவன்
  • உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!

  • தியானம், யோகா
  • நூல் வாசிப்பு
  • உடற்பயிற்சி
  • சேவை செய்தல்

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

  1. பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
  2. பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
  3. ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
  4. அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
  5. யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
  6. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  7. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
  8. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
  9. உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
  10. எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
  11. எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
  12. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
  13. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
  14. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
  15. மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும்.

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை: கீதையின் போதனைபலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு. ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து. அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்!

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

You may also like...

1 Response

  1. August 19, 2022

    […] பழம் சொல்வது போல், “எளிமையான ஆனா வாழ்க்கை. பெருசா நாடகம் எதுவும் […]