தேசிய கீதம் – ஜன கண மன பாடல் வரிகள் (National Anthem Song in Tamil)

4.5/5 - (13 votes)

தேசிய கீதம் – பாடல் வரிகள்

தேசிய கீதம்: தேசிய கீதம் – பாடல் வரிகள் / Desiya Geetham Song Meaning in Tamil / National Anthem Lines.

தேசிய கீதம் – பாடல் வரிகள்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

National Anthem Lyrics in English

National Anthem lyrics of the song are as follows:

Jana-gana-mana-adhinayaka, jaya he

Bharata-bhagya-vidhata.

Punjab-Sindh-Gujarat-Maratha 

Dravida-Utkala-Banga

Vindhya-Himachala-Yamuna-Ganga 

Uchchala-Jaladhi-taranga.

Tava shubha name jage, 

Tava shubha asisa mage, 

Gahe tava jaya gatha, 

Jana-gana-mangala-dayaka jaya he 

Bharata-bhagya-vidhata.

Jaya he, jaya he, jaya he, Jaya jaya jaya, jaya he! 

தமிழாக்கம்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்றநீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே.

உனக்குவெற்றி! வெற்றி! வெற்றி!

வரலாறு

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் “சன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாகவும், “வந்தேமாதரம்‘ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு ஜனவரியில்தான் ‘ஜன கன மண’ இந்தியாவின் தேசிய கீதமாக இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.

தேசியக் கீதம் இந்தியா
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர்
இசைஇரவீந்திரநாத் தாகூர்
சேர்க்கப்பட்டதுசனவரி 24, 1950

பாடும் முறை

தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்

சன கண மன… (Jana Gana Mana) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.


பிரதமர் மற்றும் முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய கீதம், தேசிய கீதம் lyrics in tamil, தேசிய கீதம் எழுதியவர்
தேசிய கீதம் பாடல், தேசிய கீதம் பாடல் தமிழ், தேசிய கீதம் தமிழ் அர்த்தம், தேசிய கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது, தேசிய கீதம் பாடும் நேரம்


*** இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்


Abu Dhabi LLC | Sharjah LLC | Dubai LLC | IPL UAE | Plant Souq | Briomatic

You may also like...

2 Responses

  1. June 28, 2022

    […] CBSE online Content Owned and Maintained by Central Board of Secondary Education (CBSE). Designed, Developed and hosted by National Informatics Centre, […]

  2. July 6, 2022

    […]  இந்தியா […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *