தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Rate this post

மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (3.7.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, பஞ்சாப்‌ மாநிலத்தில்‌ நடைபெற்ற 27-வது தேசிய சீனியர்‌ மகளிர்‌ கால்பந்து சாம்பியன்ஷிப்‌ – 2023 போட்டியில்‌ தங்கக்‌ கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள்‌ மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ சந்தித்து, கோப்பையை
காண்பித்து வாழ்த்துப்‌ பெற்றனர்‌.

27-வது தேசிய சீனியர்‌ மகளிர்‌ கால்பந்து சாம்பியன்ஷிப்‌ – 2023 போட்டி, பஞ்சாப்‌ மாநிலம்‌, அம்ரிஸ்தரில்‌ ஜூன்‌ 12 முதல்‌ 28 வரை நடைபெற்றது. இந்தப்‌ போட்டியில்‌ விளையாடிய தமிழ்நாடு அணி அனைத்து போட்டிகளிலும்‌ வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர்‌ 26.6.2023 அன்று நடைபெற்ற இரயில்வே அணிக்கு எதிரான அரையிறுதியில்‌, தமிழ்நாடு அணி 3 – 1 என்ற கோல்‌ கணக்கில்‌
வெற்றி பெற்று இறுதிப்‌ போட்டிக்கு தகுதி பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர்‌ பெண்கள்‌ கால்பந்து அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 28.6.2023 அன்று நடைபெற்ற இறுதிப்‌ போட்டியில்‌ தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல்‌ கணக்கில்‌ ஹரியானா அணியை வென்று, முதலிடம்‌ பெற்று தங்கப்‌ கோப்பையை வென்று சாதனை படைத்தது.

தேசிய சீனியர்‌ மகளிர்‌ கால்பந்து சாம்பியன்ஷிப்‌ போட்டியில்‌ தமிழ்நாடு அணியின்‌ சார்பில்‌ டி.தேவி, என்‌.செளமியா, பி. தனலட்சுமி, எஸ்‌.கெளசல்யா, என்‌.லாவண்யா, எம்‌.பவித்ரா, பி.துர்கா, எஸ்‌.சண்முகப்பிரியா, எம்‌.சுபாஷிணி, எம்‌. பரமேஸ்வரி, எஸ்‌. பிரியதர்ஷினி, எம்‌.மாளவிகா, எம்‌.நந்தினி, எ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர்‌. வினோதினி, எஸ்‌. ஐஸ்வர்யா, ஆர்‌. சந்தியா, பி.சந்தியா, எஸ்‌. சண்முகப்பிரியா, ஆர்‌. யுவராணி, என்‌. அம்சவள்ளி மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ திருமதி. எஸ்‌. கோகிலா மற்றும்‌ திருமதி வி. கலா ஆகியோர்‌ பங்கேற்றனர்‌. இந்த அணியில்‌ உள்ள 12 வீராங்கனைகள்‌
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில்‌ பயிற்சி பெற்ற முன்னாள்‌ மாணவியர்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களை இன்று (3.7.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, பஞ்சாப்‌ மாநிலத்தில்‌ நடைபெற்ற 27-வது தேசிய சீனியர்‌ மகளிர்‌ கால்பந்து சாம்பியன்ஷிப்‌ – 2023 போட்டியில்‌ தங்கக்‌ கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள்‌ மற்றும்‌ பயிற்சியாளர்கள்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்று, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களுடன்‌ குழு புகைப்படம்‌ எடுத்துக்‌ கொண்டனர்‌. உடன்‌ மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. சிவ்தாஸ்‌ மீனா, இ.ஆ.ப., இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர்‌ உள்ளனர்‌.

முதலமைச்சர்‌ அவர்களை இன்றையதினம்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களுடன்‌ குழு புகைப்படம்‌ எடுத்துக்‌ கொண்டனர்‌.

இந்த நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தலைமைச்‌ செயலாளர்‌ திரு. சிவ்தாஸ்‌ மீனா, இ.ஆ.ப., இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்‌ செயலர்‌ திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப. மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

You may also like...