எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை | எர்ணாகுளம் – வேளாங்கண்ணி
எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய விரைவு ரயில்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் முதல் முறையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
திருவாரூர் – காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் – காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.
- முதல் முறையாக தென் மாவட்டங்கள் வழியாக ரயில் இயக்கம்
- திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த வேளாங்கண்ணி – எர்ணாகுளம் விரைவு ரயில்
- புதிய ரயில் சேவையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- திருவாரூர் – காரைக்குடி பயணிகள் மகிழ்ச்சி
எர்ணாகுளம் – வேளாங்கன்னி வாரந்திர ரயிலை, நாள்தோறும் இயக்க வேண்டும் . சென்னையில் இருந்து திருவாரூர், காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட போட் மெயில் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Response
[…] […]