திருவாரூர் ஆழித்தேர் ஆருரா தியாகேசா முழக்கதின் சொந்தக்காரர்
திருவாரூர் ஆழித்தேர்.. ஓங்கி ஒலித்த ஆருரா.. தியாகேசா கோஷம் – மேன் ஆப் தி மேட்ச்! இவரே…… ராம சாமி ஐயா
திருவாரூர் தேரோடும் வீதிகள் எங்கும் ஓங்கி ஒலித்த பக்தர்கள் கோஷம் ஆருரா.. தியாகேசா..”. இதை, காலை, 8 மணி முதல், இரவு, 8.30 மணி வரை, தொடர்ந்து ஒலிக்க வைத்தவர் , 60 வயதிற்கு மேற்பட்ட வர்ணணையாளர் ராமசாமி ஐயா ஒருவர். தேர் அடியில் நின்ற தேர் வடம் பிடிப்பவர்களை செல்லமாக கடிந்தும், உரிமையாக தட்டிக் கொடுத்தும், கடைசிவரை அவர்களின் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டதில் இவருக்கு பெரும்பங்கு இருக்கிறது. முட்டுக்கட்டை, இரும்புத் தகடுகளை வரவழைப்பது.. பச்சைக்கொடி காட்டச் சொல்லி தேர் வடத்தை இழுக்கச் செய்வது.. சிகப்புக் கொடி காட்டி தேர் இழுப்பவர்களை நிறுத்தச் செய்வது என்பது இவரின் முக்கியப் பணி.